Friday, December 1, 2006

என் வலையில் வீழ்ந்தோரே. வணக்கம்

"மன உழைச்சல் தீர்க்க மருந்துண்டா..?"
நண்பன் ஒருவனை நான் கேட்டேன்.
எழுதென்றான்.
எங்கென்றேன்.
எங்கேனுமென்றான்.
உழைச்சல் தரும் நிகழ்ச்சிகளைக் காணும்போதெல்லாம்
மனதோடு சேர்ந்து..
கையும் உழைச்சல் கண்டது.
அப்பியாசப் புத்தகம் ஒன்று
அதன் விளைவுகளை
விரும்பி ஏற்றது..

பலநாள் கழித்து பார்க்கையில்.. படிக்கையில்
என் எழுத்தே எனக்கு இனிப்பாயிருந்தது..
நான் பெற்ற இ(து)ன்பம்
பெறுக இவ்வையகம்..
மாட்டினீர் என் வலையில்!
தப்ப வழியில்லை.
நன்றி வணக்கம்.

3 comments:

கானா பிரபா said...

கலையுலகில் தடம்பதித்த உங்களை வலையுலகிலும் கண்டேன். உவப்படைந்தேன். வருக வருக வாழ்த்துக்கின்றேன்.

வசந்தன்(Vasanthan) said...

வருக!
நல்ல பதிவுகளைத் தருக.

மலைநாடான் said...

வாருங்கள் நண்பரே!

உங்கள் எழுத்துக்களும் எங்கள் உள்ளம் நிறைக்கட்டும்.