Thursday, December 14, 2006

அவன் பொருளை அவனே எடுத்தால்..?

நாளிதழ் செய்தி-
"திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் திருட்டு"
திருடப்பட்டவை....?
தங்க நாணயங்கள் முன்னூறூ!!!
கோவிலில் விற்பனைக்கிருந்தவை
கொள்ளை போனதாம்.
பொறுப்பாயிருந்தவர்மீதுதான் சந்தேகம்.
அவர் பெயர்: "வெங்கடாசலபதி."
அவன(ர)து பொருளை அவனே(ரே) எடுத்தால்
அதற்கும் தண்டனையா?
தெரியவில்லயே!
(இன்றைய தினமலர் செய்தியொன்று)

No comments: